விசேட சுற்றிவளைப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!

Saturday, April 13th, 2019

24 மணித்தியாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: