வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!
Monday, January 30th, 2017
யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், அரியாலை, கல்வியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 5 பேரும் அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் குறித்த 5 சந்தேகநபர்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
உரமானியத்திற்கு பதிலாக உரப்பசளைகள் வழங்கப்படும்
ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!
அதிகாரங்கள் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் - 13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது - நா...
|
|
|


