வாகன விபத்து : அமெரிக்காவில் இலங்கைப் பெண் ஒருவர் பலி!
Friday, December 21st, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா லம்போக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்மனி ஒருவர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் 55 வயதான மாலினி என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று நான்கு பேரை மோதியது. இதன்போது காயமடைந்த நால்வரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
எனினும் இதில் மாலினி என்ற இலங்கைப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு முழுவதும் நடமாடும் பொலிஸ் பிரிவு.!
பகிடிவதை: பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!
இலங்கையின் பெண் தொழில் முனைவோரின் வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்கா நிதி உத...
|
|