வவுனியாவில் திடீர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ள விஷேட அதிரடிப்படையினர்!
Friday, October 16th, 2020வவுனியா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலைமுதல், திடீர் ரோந்து நடவடிக்கைகளில் விஷேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று முற்பகல் வேளையிலிருந்து விஷேட அதிரடி படையினர், வவுனியா நகர் பகுதிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளிலும் ரோந்தினை மேற்கொண்டிருந்ததுடன் பிரதான வீதி வழியாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
மேலும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களையும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர். விஷேட அதிரடி படையினர், மோட்டார் சைக்கிள்களிலேயே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாவகச்சேரியிலும் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆள்சேர்ப்பு!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
|
|