வடமாகாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு கலாநிதி, முதுமாணிப் பட்டங்கள்!

அமெரிக்க உலக பல்கலைக்கழகத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கலாநிதி மற்றும் முதுமாணிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேற்படி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கொழும்பு – 7 இலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
தென்னாசிய கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தொழில் தகைமை சார் பட்டமளிப்பு விழாவில் கலாநிதி பட்டங்களை யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கந்தையா சிவராசா, பனை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் பாலசுப்பிரமணியம் சுதாகரன், ஏஞ்சல் சர்வதேச ஆங்கிலப் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி அம்பிகா ராஜரட்ணம் ஆகியோர் பெறவுள்ளனர்.
முதுமாணி பட்டத்தினை பனை அபிவிருத்தி சபையின் முகாமையாளர் (விரிவாக்கம்) கார்த்திகேசு கோபாலகிருஷ்ணன் பெறவுள்ளார்.
Related posts:
புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் - புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு!
பிணைமுறி மோசடி விவகாரம் - சீ அறிக்கையின் தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்!
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|