வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளுக்கு அதிபர் ஆசிரியர் விடுதி நிர்மாணிப்பு!
Wednesday, August 24th, 2016
வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி தேசிய பாடசாலையிலும் 80 இலட்சம் ரூபா செலவில் அதிபர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் அல் அசார் தேசிய பாடசாலையில் 13 மில்லியன் ரூபா செலவில் ஆசிரியர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, வடமாகாணக் கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 37 பாடசாலைகளில் அதிபர் விடுதி அமைக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் வவுனியா பல்கலைக்கழகம் மூடப்பட்டது!
நாடு முழுமையாக முடக்கப்படாது - பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!
கலந்துரையாடல் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் - நாமல் ...
|
|