லா-நினாவினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு!

Monday, May 30th, 2016

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடும் வரட்சி மற்றும் கடும் மழை, வெள்ளத்தை ஏற்படுத்திய எல்-நினோ பருவநிலை, முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள, அதேவேளை, அடுத்து லா-நினா என்ற கடும் குளிரான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த லா-நினா பருவநிலை மாற்றத்தினால், எல்-நினோவைப் போன்று கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும், எனினும் இலங்கை அதிகளவில் பாதிக்கப்படாது என்றும், வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

“எல்-நினோ இப்போது முடிவுக் கட்டத்தில் இருக்கிறது. ஜூன்-ஜூலை மாதமளவில் இது இயல்பு நிலைக்கு வரும். அப்போது லா-நினா உருவாகலாம். இதுவும், எல்-நினோவைப்போன்று அழிவுகளை ஏற்படுத்தலாம். எனினும், இது இலங்கைக்கு  பாரிய அச்சுறுத்தலாக இருக்காது. லா-நினா, எல்-நினோ ஆகிய இரண்டுமே சமுத்திரத்தின் வெப்பநிலை மாற்றங்களால் தான் உருவாகிறது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் உருவான போதும் அவற்றினால், சிறிலங்காவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: