ரோசி சேனநாயக்க கொழும்பு மாநாகர சபையின் புதிய மேயர்?

Sunday, August 21st, 2016

கொழும்பு மாநாகர சபையின் புதிய மேயராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் ரோசி சேனநாயக்க பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருகின்றார். இந்நிலையிலேயே கொழும்பு மாநாகர சபையின் மேயர் ஜே.எம்.முஸம்மிலுக்கு பதிலாக ரோசி சேனநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு மாநாகர சபையின் மேயராக பணியாற்றும் ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கொழும்பு மாநாகர சபையின் மேயராக பணியாற்றும் ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாகவும் எனினும் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

 

Related posts: