யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Tuesday, February 21st, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை (22) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், வதிரி, இரும்பு மதவடி, சக்களாவத்தை, ஊறணி, விக்கினேஸ்வரா வீதி, வீரவாணி வீதி, காளி கோவிலடி ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
1-Copy5-620x336

Related posts: