கொள்ளையர்கள் இருவர் கைது!

Monday, August 1st, 2016

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பொலிஸாரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நீர் இறைக்கும் மோட்டர்களை இவ்விருவரும் இணைந்து கொள்ளையிட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து கைதான, சந்தேகநபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, கொள்ளையிடப்பட்ட நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் மீட்கப்பட்டதுடன், இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தப்பி சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  இதேவேளை குறித்த நீர் இறைக்கும் மோட்டர் திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் அப் பகுதியில் கடந்த காலங்களில் புறா திருட்டுக்களையும் செய்துள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.  கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் – கொய்யா தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 18 முதல் 19 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: