யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை
 Friday, May 5th, 2017
        
                    Friday, May 5th, 2017
            யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(04) காலை-06:30 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
இதேயிடத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்( வயது -31) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி  - இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தள...
பயங்கரவாதிகளின் பாதுகாப்பு உறைவிடமாக கனடா மாறியுள்ளது- இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவிப்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் - துறைமுகங்கள்,...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        