யாழ். பல்கலை மாணவர் படுகொலை:உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழு யாழ். வருகை! 

Tuesday, October 25th, 2016

யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த புதன்கிழமை(20) இரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்றுச் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்றுப் பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர். மாணவர்களின் படுகொலை தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக உண்மையைக் கண்டறியும் குழுவின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_92009010_uniboys

Related posts:


ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை - ஓய்வூதிய திணை...
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் - எரிசக்தி...