யாழ் கொக்குவிலில் பகுதியில் கைக்கண்டு மீட்பு !
Monday, May 4th, 2020யாழ்ப்பாணம் – கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதர முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.
எனினும், குறித்த பகுதிக்கு வந்த இராணுவ உயர் அதிகாரிகள், அங்கிருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டை மீண்டும் அவ்விடத்தில் வைக்குமாறு கைக்குண்டை மீட்ட இராணுவ சிப்பாயை அறிவுறுத்தியிருந்தனர்.
மீண்டும் குறித்த வடிகாலுக்குள் இறங்கிய அந்த இராணுவச் சிப்பாய் இருந்த இடத்திலேயே கைக்குண்டை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதன்பின்னர் சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.
விசாரணைகளின் பின் மீண்டும் கைக்குண்டு அங்கிருந்து இராணுவத்தினரால் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|