யாழ். குடாநாட்டில் வாழைச்செய்கை பாதிப்பு!
 Tuesday, December 20th, 2016
        
                    Tuesday, December 20th, 2016
            
யாழ்.குடாநாட்டில் கடந்த மழையினால் வாழைச் செய்கையாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் தாக்கத்தினால் குறைந்தது 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதுடன் அழிந்துள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கூடுதலான வாழைகள் குழைகளுடன் விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட வாழைகளை தோட்டங்களில் இருந்து அகற்றி நிலங்களை சீர் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாழை அழிவு காரணமாக வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த வாழைப்பழத்தின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts:
மீண்டும் ஊடக குழு உதயம்!
சுன்னாகம் பொலிஸ் நிலைய கைதி மரணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
மஹாவலி நீர் விநியோகம்!
|  | 
 | 
ஏற்றுமதி பயிர்களான கித்துள் மற்றும் பனை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பத...
கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளின் கூரைகளுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு - மின் மற்றும் ...
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...
 
            
        


 
         
         
         
        