யாழ்.குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ள புகையிலைச் செய்கை!
Friday, December 23rd, 2016
யாழ்.குடாநாட்டில் புகையிலைச் செய்கை விவசாயிகளால் ஆரம்பிக்கபட்டுள்ளது. வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிளான்,மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி,கட்டுவன், ஊரெழு. உரும்பிராய், சுன்னாகம், இணுவில், மருதனார்மடம், அச்செழு, கோண்டாவில், நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும், தீவகத்தின் பல பகுதிகளிலும் புகையிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புகையிலைப் பயிர்ச் செய்கைக்கான நாற்றுக்களை விவசாயிகள் வடமாராட்சியின் பொலிகண்டி, திக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாற்று மேடைகளிலிருந்து தருவித்து நடுகை செய்து வருவதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது - பெற்றுள்ளனர் - சு...
நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை - விலையும் பாரியளவில் உயர்வு!
|
|