யாழ்ப்பாணம் நகரில் தீ – மூன்று கடைகள் பாதிப்பு!
Thursday, December 28th, 2023
யாழ்ப்பாணம் நகரில் கட்டிடம் ஒன்றில் உள்ள மூன்று கடைகளில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ காரணமாக ஆடை விற்பனை நிலையம், பாடசாலை புத்தக பொதிகளை விற்பனை கடை என்பன முற்றாக அழித்துள்ளன. மேலும் அருகில் உள்ள இரண்டு கடைகளுக்கும் தீயால் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீக்காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. மின்சார சபை கட்டிடத்திற்கான மின் விநியோகத்தை தற்காலிகமாக துண்டித்துள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு விவசாயிகள் அன்னாசியில் ஆர்வம்!
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...
நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பேன் நீதி அயமைச்சர் உறுதி!
|
|
|
எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத...
நாட்டை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ அரசின் நோக்கமல்ல - வெளிநாட்டு முதலீடுகளே எமது இலக்கு - வெளிவிவகா...
பயணச்சீட்டு வழங்காத போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட ...


