யாழ்ப்பாணத்தில் வெங்காய அறுடை ஆரம்பம்!

Friday, March 15th, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் பல பாகங்களிலும் பரவலாகச் சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில் ஆயிரத்து 500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் இந்தச் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.

காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது பெற்றுள்ளனர் என்று மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

கூடுதலான செய்கையாளர்கள் வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தியெ இம்முறை செய்கையில் ஈடுபட்டனர். தற்போது இந்த வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவை கூடுதலாக சந்தைகளுக்கு வர தொடங்கியுள்ளன.

முன்னர் கிலோ 160 ரூபா வரையாக விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 90 ரூபாவாகச் சரிந்துள்ளது. இந்தச் சின்ன வெங்காயம் தென்பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

வெங்காயத்தின் திடீர் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேசமயம் நீர்வேலி கோப்பாய் சிறுப்பிட்டி புத்தூர் இடைக்காடு நவக்கிரி உரும்பிராய் ஊரெழு அச்சுவேலி பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் கூடுதலான செய்கையாளர்கள் இந்தச் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டள்ளனர்.

Related posts: