யாழில் கொள்ளையர்களின் அட்டகாசம் : பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Monday, July 2nd, 2018

அராலி களுவத்துறை வைரவர் கோவிலடியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகைப் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சுமார் 3 மணி நேரம் தேடி 20 பவுண் தங்க நகைகள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அராலி களுவத்துறை வைரவர் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் கொள்ளையர்கள் இருவர் புகுந்தனர். அவர்கள் அரைக்காற்சட்டையும் ரிசேட்டும் அணிந்திருந்தனர். முகத்தை மூடி துணி கட்டியிருந்தனர். கைகளுக்கு குளோஸ் போட்டிருந்தனர். குடும்பத்தலைவருக்கு கால் ஏலாத காரணத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை.
குடும்பப் பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை புடுங்கி எடுத்தனர். மோதிரத்தை சவர்க்காரம் போட்டு உருவினார்கள். நேற்று கொண்டு வந்து தந்த வட்டிக் காசும் காசோலையும் எங்கே என்று கேட்டு குடும்பப் பெண்ணை தாக்கினார்கள். அவர் காசோலைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
அத்துடன் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டில் தமிழ் மொழியில் திரைப்படங்கள் நாடகங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைவு - நாடாளுமன்ற உறுப்பி...
இலங்கையில் விருந்தோம்பல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – பி...
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார சு...