மைத்துனரைத் தாக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

Saturday, July 23rd, 2016

மைத்துனரைத் தாக்கினார் என்ற குற்றச் சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் -4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(21-07-2016) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட வருட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்த குறித்த பெண்மணி கடந்த-19 ஆம் திகதி தனது சொந்தவிடமான யாழ்ப்பாணம் புங்கன் குளம் பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

வீட்டுக்குச் சென்றவரைக் குறித்த பெண்ணின் கணவனின் தம்பி வீட்டுக்குள் செல்லவிடாது தடுத்துள்ளார். இதனால் , ஆத்திரமடைந்த குறித்த பெண்மணி ஆணொருவருடன் சேர்ந்து தனது மைத்துனரைத் தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலால் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்துக் குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: