மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இலங்கையின் நிலவரம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்!

Sunday, September 13th, 2020

இலங்கையில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,195 ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த 19 பேருக்கும் குவைத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 03 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,972 ஆக அதிகரித்துள்ளது.

200 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: