மேதினக் கூட்டத்திற்கு பயன்படுத்தும் அரச பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்! – பிரதமர்
Sunday, April 24th, 2016ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றிவரும் இலங்கைபோக்குவரத்து சபை பஸ்களுக்குரிய முழுக் கட்டணங்களும் கட்டாயம்செலுத்தப்படவேண்டும் என அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடையத்தில் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கமுடியாது. ஏனைய கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இந்த ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
இதேவேளை கட்சியின் மேதின ஊர்வலம் மற்றும் மேதினக் கூட்டம் போன்றவற்றை இணையதளங்களில் வெளியிடவேண்டுமானால் அதற்குரிய கட்டணங்களையும் கட்டாயம் செலுத்தவேண்டும்.
இவை அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரதமர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அமைச்சர் கயந்தகருணாதிலக்க மேலும் கூறியுள்ளார்.
Related posts:
இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!
|
|