முல்லைத்தீவில் 77 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
Saturday, September 24th, 2016
முல்லைத்தீவு – அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து 77 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கேரளா கஞ்சாவானது பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!
பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..!
நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் - இன்றும் பல சந்திப்புகள் !
|
|