முன்னாள் ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் வருகை!
Thursday, August 11th, 2016முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதரவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பதற்கான கருத்திட்டத்தை வடக்கு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் மழைநீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
Related posts:
|
|