முன்னாள் ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் வருகை!

Thursday, August 11th, 2016

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்டாரநாயக்க குமா­ர­துங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்டு வருகைதரவுள்ளார்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்டு நடைமு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் மழைநீர் சேக­ரிப்­ப­தற்­கான கருத்­திட்­டத்தை வடக்கு மக்கள் மத்தியில் கொண்­டு­செல்லும் வேலைத்­திட்டம் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது.

இந்­நி­லையில் மழைநீர் சேக­ரிக்கும் நீர்த் தாங்­கி­களை பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு இன்று பிற்­பகல் இரண்டு மணிக்கு வேலணை பிர­தேச செய­லக கேட்போர் கூடத்தில் நடைபெற­வுள்­ளது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொள்ளும் வகை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒருமைப்பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்­தின் தலை­வி­யு­மான சந்­திரிகா பண்டாரநாயக்க குமா­ர­துங்க யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொள்­கின்றார்.

Related posts: