ஐந்து மாவட்டங்களுக்குமான உர விநியோகம் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018

ஓமானிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள  உரத்தினை ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகஇலங்கை உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் 48 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது. உர பகிர்ந்தளிப்பு முறையாகஇடம்பெறுவதாக உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உரவிநியோகத்தை துறைமுகத்திலிருந்து 250 பாரவூர்திகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: