முதியோருக்காக புதிய யாப்பு.!
Tuesday, June 21st, 2016
பிள்ளைகளால் கைவிடப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் முதியவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கென புதியதோர் யாப்பு உருவாக்கப்படுமென சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற முதியோர்களுக்கான விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
ஐக்கிய நாடுகளின் முதியோர் பாதுகாப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டத்தில் நாமும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளோம். மேலும் எமது நாட்டினது முதியோர்களின் எண்ணிக்ககை கடந்த காலத்தைவிட வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு பிரதான காரணம் மக்களினது ஆயுட் காலம் அதிகரித்தமையே ஆகும்.
குறிப்பாக இலங்கையில் கடந்த 1952 ஆம் ஆண்டளவில் சராசரி மனிதனது ஆயுட்காலமானது 52 வயதாகவே காணப்பட்டது. எனினும் அது 60,65 வயது மட்டத்தை கடந்து தற்போது 70 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையை பொறுத்தமட்டில் நூற்றுக்கு 99 வீதமான முதியவர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் தங்கி வாழ்பவர்களாகவே இருக்கின்றனர்.இதில் பலர் சூழ்நிலை காரணமாக தனித்து விடப்படுகின்றனர்.
இவ்வாறு தனித்து விடப்படுபவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அவர்களுக்கான இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகின்றது.இதற்கென இலங்கையில் 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலும் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்துள்ள பிள்ளைகளால் தங்களது பெற்றோர்களுக்கு பணம் அனுப்பப்பட்டாலும் அவர்களின் நலன் பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் பலர் பெரிதும் முதியோர் இல்லத்தினை நாடு கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான முதியவர்களை குறைந்த பட்ச சேவையாளர்களே கவனிக்கின்றனர். இவர்களது ஊதியமும் வெறும் பத்தாயிரம் ரூபாயிற்கும் குறைவாகவே இருக்கின்றது. இதற்காக திவிநெகும மற்றும் சமுர்த்தி நலன்புரி அமைப்புகளில் பெறப்படும் நிதியினைக்கொண்டு முதியோர் இல்லங்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|