முதியோருக்காக புதிய யாப்பு.!

Tuesday, June 21st, 2016

பிள்­ளை­களால் கைவி­டப்­பட்டு நிர்க்­க­திக்­குள்­ளாகும் முதி­ய­வர்­களின் உரி­மை­களை பாதுகாப்பதற்கென புதி­யதோர் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க தெரி­வித்துள்ளார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற முதி­யோர்­க­ளுக்­கான விசேட நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உறை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் –

ஐக்­கிய நாடு­களின் முதியோர் பாது­காப்பு தொடர்­பான விசேட வேலைத்­திட்­டத்தில் நாமும் இணைத்­துக்­கொள்­ளப்பட்டுள்ளோம். மேலும் எமது நாட்­டி­னது முதி­யோர்­களின் எண்­ணிக்­ககை கடந்த காலத்­தை­விட வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு பிர­தான காரணம் மக்­க­ளி­னது ஆயுட் காலம் அதி­க­ரித்­த­மையே ஆகும்.

குறிப்­பாக இலங்­கையில் கடந்த 1952 ஆம் ஆண்­ட­ளவில் சரா­சரி மனி­த­னது ஆயுட்­கா­ல­மா­னது 52 வய­தா­கவே காணப்­பட்­டது. எனினும் அது 60,65 வயது மட்­டத்தை கடந்து தற்­போது 70 ஆக அதிகரித்துக் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இலங்­கையை பொறுத்­த­மட்டில் நூற்­றுக்கு 99 வீதமான முதி­ய­வர்கள் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­டத்தில் தங்கி வாழ்­ப­வர்­க­ளா­கவே இருக்கின்றனர்.இதில் பலர் சூழ்­நிலை கார­ண­மாக தனித்து விடப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வாறு தனித்து விடப்­ப­டு­ப­வர்­களின் பாது­காப்பு, சுகா­தாரம் மற்றும் அவர்­க­ளுக்­கான இருப்பிடத்தை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.இதற்­கென இலங்­கையில் 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்­லங்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. மேலும் வேலை நிமித்தம் புலம் பெயர்ந்துள்ள பிள்­ளை­களால் தங்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கு பணம் அனுப்­பப்­பட்­டாலும் அவர்­களின் நலன் பாது­காப்பு தொடர்­பான கார­ணங்­களால் பலர் பெரிதும் முதியோர் இல்­லத்­தினை நாடு கின்றனர்.

இந்­நி­லையில் பெரும்­பா­லான முதி­ய­வர்­களை குறைந்த பட்ச சேவை­யா­ளர்­களே கவ­னிக்­கின்­றனர். இவர்­க­ளது ஊதி­யமும் வெறும் பத்தாயிரம் ரூபாயிற்கும் குறைவாகவே இருக்கின்றது. இதற்காக திவிநெகும மற்றும் சமுர்த்தி நலன்புரி அமைப்புகளில் பெறப்படும் நிதியினைக்கொண்டு முதியோர் இல்லங்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related posts:


சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...
தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் பகிரங...
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது - பிரதம...