முடிவுக்கு வருமா சைட்டம் பிரச்சினை !
Tuesday, August 29th, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு புதிய தீர்வுகள் உள்ளடக்கி, விசேட அறிக்கையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது தாம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அது தொடர்பான விசேட அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்த ஐந்து முன்மொழிவுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை வழங்கியதாகவும் வைத்தியர்கள் சங்கம் கூறியுள்ளது.
Related posts:
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!
உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை!
வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!
|
|