மீட்புப் பணிகள் நிறுத்தம் – 141 பேரது நிலை?

Sunday, May 22nd, 2016
கேகாலை , அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரநாயக்க பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவினால், மூன்று கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள் புதைந்து போயுள்ளன.

அங்கிருந்த 141 பேரின் நிலை குறித்து இன்னமும் தெரியாதுள்ளது. இவர்கள் நிலத்தில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவர்களை இனி உயிருடன் மீட்கும் வாய்ப்புகள் இல்லை எனவும், மீட்புப் பணிகளுக்குச் சாதகமான காலநிலை இல்லை எனவும், மீட்புப்பணிகளைக் கைவிட இராணுவம் முடிவு செய்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள், சுமார் 5 தொடக்கம், 15 அடி வரையிலான சேற்று மண்ணினால் மூடப்பட்டுள்ளது.

இதனை முற்றாக அகற்றி மீட்புப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

as02 as01 as

Related posts:

ஐ. நா. மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரில்  இலங்கையின் உயர்மட்ட குழு பங்கெடுக்க வாய்ப்பு?
வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் - வெளிவிவகார அமைச...
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகா...