மாறுகின்றது காலநிலை : மக்களே அவதானம்!
Wednesday, July 13th, 2016
காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது
Related posts:
இலங்கையில் இரண்டாயிரத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் !
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!
முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் - நிகழ...
|
|