மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்த இளம் பெண்

Wednesday, April 20th, 2016
மானிப்பாய் கட்டுடைப்  பகுதியில் கடந்த திங்கட்கிழமை(17-)  இளம் பெண்ணொருவர்  தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறிப்பிட்ட இளம்பெண் குறித்த தினம் தனது வீட்டிற்குத்  தோட்டக் கிணறொன்றினுள்  விழுந்தே தற்கொலை செய்துள்ளார்.தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குப்  பிரேதபரிசோதனைகளுக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்னஎன்பது தொடர்பில் இதுவரை தெரிய வராத நிலையில் மானிப்பாய்ப்  பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts:


அவசியமற்று கூட்டம் கூடுவது தொடர்பாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற படையினருக்கு பாதுகாப்பு அமைச்ச...
மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!