மற்றுமொரு வர்த்தகரும் காணாமல் போனார்!
Monday, September 5th, 2016பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முஹம்மட் நஸ்ரின் என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக குறித்த வர்த்தகரின் தந்தை பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் தங்கி வங்கியின் தங்க நகை ஏலவிற்பனைக்கு சென்ற குறித்த வர்த்தகரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் காணப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இன்று வரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும் எனவே அவர் காணாமல் போயிருக்கலாம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரபல நாடுகளின் தூதுவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!
நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் - யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன...
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
|
|