மருத்துவர் என்ற போர்வையில் மோசடி செய்தவர் கைது!
Saturday, June 30th, 2018மருத்துவர் என்ற போர்வையில் நிதி மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த சந்தேகநபர் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பமுனுகம, கந்தானை, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் சந்தேகநபர் மோசடி செய்துள்ளதுடன் பல நபர்களிடம் நிதி மோசடி செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, புறக்கோட்டைப் பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து மருத்துவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
|
|