மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!
Friday, July 16th, 2021மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின் ஒழுக்கு காரணமாக இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விபத்தில் காயமடைந்த ஆசிரியை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!
டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்...
|
|