மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கான மத்திய நிலையம் அமைப்பு!
Friday, January 6th, 2017இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பொதியிடல் களஞ்சியப்படுத்தும் வசதிகள் ஆகியன இந்த மத்திய நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட சந்தையை இலக்காகக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள தரத்திற்கும் தேவைக்கும் அமைவாக உள்ளுர் விவசாயிகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!
மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!
|
|