மதுபோதையில் சாரதித்துவம்: 9885 சாரதிகள் கைது – பொலிஸ் தலைமையகம்!
Friday, August 23rd, 2019கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 9885 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அ.அட்டைகள் வழங்குவதங்கு ஏற்பாடு!
தேயிலைச் செடிகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்!
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது சுகா...
|
|