போப்பாண்டவர் எச்சரிக்கை!!
Thursday, July 28th, 2016உலக யுத்தம் குறித்து புனித போப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண்மையை சொல்ல அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது - அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் எ...
கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வ...
|
|