பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக தெரிவிப்பு?

Tuesday, March 19th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை குறித்த விசாரணைகளில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார என்பவரினால் வழங்கப்பட்டிருந்த குரல் மாதிரி பொலிஸ் மா அதிபரின் குரலுக்கு நிகரானது என பரிசோதனைகளின் அம்பலமாகியுள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினால் பொலிஸ் மா அதிபரின் குரல், நாமல் குமார வழங்கிய குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சதி தொடர்பில் நேற்று முன்தினம் மீண்டும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்ததுடன், இந்த கொலை சதி திட்டத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்பு உண்டு என நாமல் குமார குற்றம் சுமத்தியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தம்முடன் தொடர்பு பேணியதாக நாமல் குமார குற்றம் சுமத்தியிருந்தார்.

நாமல் குமாரவை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: