பேராதனை பல்கலை பொறியியல் பீட தீ விபத்து தொடர்பில் விசாரணை!

Monday, July 4th, 2016

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார்.

மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தினால் 30 இற்கும் அதிகமான கணினிகள் அழிவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

13612117_1707208499546056_578818295699246594_n

13439202_1441499789209264_3050210286346104955_n

Related posts: