பெறுமதிமிக்க பாடங்களை இலங்கையில் கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்!

Wednesday, August 31st, 2016

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஏற்பாட்டாளராக செயற்பட்டபோது பெறுமதிமிக்க பாடங்களை கற்றுக்கொண்டதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டுவரை சொல்ஹெய்ம் இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்டு வந்தார்.

தம்மைப்பொறுத்தவரை, இணக்கத்துக்கு வராத அரசியல் தலைவர்கள், கொரில்லா தலைவர்கள்அல்லது பயங்கரவாதத் தலைவர்களுடன் தொடர்ந்தும் பேசவேண்டும். அதனை தொடர்ந்தும்மேற்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிறுவன தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்உரையாற்றும்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

Related posts: