புற்றுநோயாளர்களுக்கு எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை!
Friday, October 28th, 2016அவுஸ்திரேலியாவின் வின்சன் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.டேவிட்டின் பணிப்புரைக்கு அமைய மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மஹரகம வைத்தியசாலையில் எலும்பு மச்சை சத்திர சிகிச்சைக்காக தற்சமயம் நூற்றுக்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த சத்திர சிகிச்சைக்காக 3 கோடி ரூபாவிற்கும் நான்கு கோடி ரூபாவிற்கும் இடைப்பட்ட நிதியை செலவிட வேண்டும்
Related posts:
புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி!
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அம...
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
|
|