புத்தூரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஐவர் கைது !

Sunday, May 28th, 2017

யாழ். புத்தூர் கலைமதி மயான விவகாரம் தொடர்பாக ஐவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.புத்தூர் கலைமதி மக்கள் குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்யச் சென்ற போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இதனையடுத்து நெல்லியடிப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாகச் சிறுவனொருவன் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts: