புத்தாண்டை முன்னிட்டு 4500 பஸ்கள் சேவையில்!
Sunday, April 3rd, 2016
புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை 4500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து இந்த விசேட பஸ் சேவை ஆரம்பமாகும் எனவும், மீண்டும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பை நோக்கி குறித்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதி...
2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
|
|
|


