புதையல் தேடிய நால்வர் கைது !

Thursday, August 11th, 2016

செட்டிக்குளத்தில் புதையல் தோண்டிய நால்வர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-

செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் நேற்று (10) அகழ்வுப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அநூராதபுரம்,முதலியார்குளம்,நேரியகுளம் ஆகிய பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts:


சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது இலங்கை மத்திய வங்கி அறிக...
அதிபர் சேவை தரம் மூன்று – புதிய போட்டி பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானம்...