புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Tuesday, January 10th, 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்று முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் காலங்களில் காலை 06.00, 11.00 மற்றும் மாலை 05.00 மணி ஆகிய நேரங்களில் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் ஊடக அறிக்கைகள் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இவர் இதற்கு முன்னதாகவும் சில தடவைகள் அப் பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.  மேலும் பொலிஸ் பிரிவுகள் 42க்கு ஊடக இணைப்பு அதிகாரிகள் 42 பேர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1236126774Untitled-1

Related posts: