புகையிலை நிறுவனங்கள் மீதான வரி90% அதிகரிக்கும்!

Friday, July 29th, 2016

புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  இதன்படி, புகையிலை நிறுவனங்களினால் தற்போது அறவிடப்படும் நூற்றுக்கு 72 வீத வரி 90 வீதமாக அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.இதன்மூலம் வற் வரி ஊடாக கிடைக்கும் வருமானத்தை விட அதிக வருமானம் பெறமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: