புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாமைக்கு ரூ.1000 தண்டம்!
Sunday, February 10th, 2019வாகனம் செலுத்தும்போது புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இதேவேளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் புகைப் பரிசோதனைச் சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது சான்றிதழை சாரதி காண்பித்ததையடுத்து அவர் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !
ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க...
2 வயது குழந்தைகளை கொண்ட தாய்மார்ளுக்கு வெளிநாட்டு தொழில் இல்லை – வெளியானது புதிய சுற்றறிக்கை!
|
|