பிரசன்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
Thursday, September 7th, 2017நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரின் மனைவிற்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டார்.
அதன்படி , இம்மாதம் 9ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை வெளிநாடு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேல்மாகாண முதலமைச்சராக இருந்த சமயம் , மீதொடமுல்லை பிரதேசத்தில் இடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக , 64 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டது தொடர்பிலான வழக்கில் இவர்கள் வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுஷ்டிப்பு!
பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அ...
|
|