பிரசன்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Thursday, September 7th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரின் மனைவிற்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டார்.

அதன்படி , இம்மாதம் 9ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை வெளிநாடு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேல்மாகாண முதலமைச்சராக இருந்த சமயம் , மீதொடமுல்லை பிரதேசத்தில் இடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக , 64 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டது தொடர்பிலான வழக்கில் இவர்கள் வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சட்டம் அனைவருக்கும் ஒன்றே: சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு!
7 நாட்களில் எரிபொருள் விற்பனை அதிகரிப்பு - பண்டிகை காலங்களில் கூடுதல் விநியோகம் என அமைச்சர் காஞ்சன வ...
இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் - அதுவரை கடிதங்கள் வழங்கப்படாத...