பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021

நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

அதில் அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட அரச நிறுவனத்திற்கு சொந்தமான 82 ஆயிரத்து 194 வாகனங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 76 ஆயிரத்து 661 வாகனங்கள் இயங்கும் நிலையிலும் 5 ஆயிரத்து 533 வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையிலும் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: