பாலாவி விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் அதிகாலையில் சுற்றிவளைப்பு – 8 பேர் கைது!

Thursday, July 23rd, 2020

பாலாவி விமானப்படைப் புலானாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கலால்வரித் திணைக்கள நிலையத்திற்கு அருகில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலநறுவை கலால் வரித் திணைக்களத்தில் பணிபுரியும் அதிகாரியொருவருக்கு புத்தளம் கலால்வரி திணைக்களத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ஒருவருர் ஐஸ் போதைப் பொருளை வழங்கும் போது சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது புத்தளம் கலால்வரித் திணைக்களத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் அதிகாரி காரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதன்போது கலால் திணைக்கள அதிகாரி மற்றும் 4 பெண்கள் உற்பட 8 பேர் கைது செய்துள்ளதுடன் சொகுசு வான் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts: