பாதீடு நிறைவேற்றப்பட்டால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு என்பன வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: