கிளிநொச்சியில் சடலம் மீட்பு- குழப்பத்தில் பொலிஸார்?
Tuesday, September 13th, 2016கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்த சடலம் இன்று (13) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related posts:
மைத்துனரை கொலை செய்தவருக்கு மரணதண்டனை!
கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
|
|